Sunday, September 23, 2012

அவள்முகம்


நித்திரையில் அவள்முகம், நித்தம் கணினி திரையில் அவள்முகம் வளரும் பிறையில் அவள்முகம், வானத்து மதியில் அவள்முகம் விரிந்த மலரில் அவள்முகம், விழுந்த சருகில் அவள்முகம் பசும் புல்லில் அவள்முகம், பனித்துளியில் அவள்முகம் நடந்த வீதியில் அவள்முகம், நகர்ந்த ஊர்தியில் அவள்முகம் ஒளிர்ந்த விளக்கில் அவள்முகம், ஓங்கிய மலையில் அவள்முகம் பரந்த கடலில் அவள்முகம், பார்க்கும் இடமெல்லாம் அவள்முகம் கண்களை மூடினாலும் அவள்முகம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அவள்முகம் இருப்பது என் கண்ணுக்குள்ளே என்று ...... மானுடத்தின் காதலன்

Wednesday, June 27, 2012

நீ ..

மாலையில் பூக்கும் மல்லிகை நீ .. மல்லிகை சூடிய மங்கையும் நீ.. என்னை மதி மயங்க வைக்கும் மாயாவியும் நீ .. கடை கண்களால் காயப்படுத்தியவளும் நீ .. என்னை கனவு காண வைத்தவளும் நீ .. என்னை கவிபாட வைத்தவளும் நீ .. உன்னிடம் கடன்பட வைத்தவளும் நீ .. என் வெற்றிக்கு முகம் காட்டியவளும் நீ .. என்னுடைய நல்ல தோழியும் நீ .. என் வாழ்வில் ஒளிஊட்ட வந்த நீ .. என்னுடைய ....................................!!! மானுடத்தின் காதலன்

Friday, May 4, 2012

இந்தியா

v dir="ltr" style="text-align: left;" trbidi="on"> iv> ..............................​..இந்தியா.....................​.... இருபதாயிரம் ஆண்டுகால பழம்பெரும் நாகரீகம் கொண்ட இனக்குழுக்களை இதிகாச காம கதை சொல்லி வருணாசிரம வரிசைப்படி வாட வைத்து வந்தேறிகளுக்கு வால் பிடித்து, வழமையாய் வாழ்ந்தவனை வகுப்புவாத பிரிவை சொல்லி வாசலுக்கு வெளியே நிறுத்தி வாழ்வை அழித்த வஞ்சக நெஞ்சம் கொண்ட பாதக பார்ப்பனியர் ஆளும் நாடு .................இந்தியா ..................

மே தின வாழ்த்துகள் ...

உழைப்பில்லாமல் உலகத்தை பார்த்தால் உலகத்தில் ஒன்றுமே இல்லை உழைப்பவனுக்கு உரிமையில்லை ஊழலுக்காக தரப்படும் இலவசத்தின் உழைப்பு தன்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட குருதியை குடித்து உழைக்காமல் கொளுத்து கிடக்கும் முதலைகளின் எச்சம் என்பதை அறிந்து உலக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உரிமைக்காக போராடி பொதுவுடைமை சமுதாயம் உருவாக உழைக்கும் அணைத்து உழைக்கும் மக்களுக்கும் மே தின வாழ்த்துகள் ...

நட்பு

ஒரு வரி கவிதை - இவன் என் நண்பன் ஒரு சொல் கவிதை - நட்பு ஒரு எழுத்து கவிதை - நீ . இன்னும் என்ன சொல்ல இறுதிவரை இருப்பது நட்பு இறந்தபின் இருப்பதும் நட்பு

வான் மகள்

அழகான மாலை நேரம் அருமையான தென்றல் காற்று அனாதையாய் அமர்ந்திருந்தேன் அன்னைபோல் அரவணைக்க வந்தாள் இருவரும் பார்த்தோம் இன்பமான நேரம் ஒரு முத்தம் கேட்டேன் மறுத்தாள் உறங்க மடி கேட்டேன் மறுத்தாள் சிறு புன்னகை கேட்டேன் மறுத்தாள் இருவரும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம் திட்டவாவது செய் என்றேன் மறுத்தாள் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தோம் காலை விடிந்ததும் கதிரவன் வந்ததும் தாவிக் குதித்து ஓடி மறைந்தாள் என்னை மட்டும் தனிமைபடுத்திவிட்டு ... மானுடத்தின் காதலன்

Tuesday, March 20, 2012

அழிவின் விளிம்பில் மக்கள் ஆயுதமாய் அணு உலை ...

உலக நாடுகளின் வரலாற்றின் அடிப்படை இல் பாத்தால் , இரு நாடுகளுக்கு இடையே சண்டை என்று வரும் பொது முதலில் குண்டு போடப்படுவது அணு உலை மீது தான். இவ்வாறு இருக்கயில் நமக்கோ நாலா புறமும் பகை வளர்த்து உள்ளது இந்தியா 1 . பாக்கிஸ்தான் உடன் பிறந்த சகோதரனை மதத்தின் பெயரால் மகாத்மாவின் சாதனையால் தீரா பகை வனாக்கிவிட்டோம். 2 . வங்கதேசம் , அதன் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்று எண்ணி பாக்கிஸ்தான் இடமிருந்து பெரிதும் , அதில் பாதி மக்கள் எதிரிகலானர்கள் , இந்திய உள்நாட்டு பகை வளர்த்து தனக்கு ஆதரவானவனை ஆட்சியில் வைத்தது அதனால் அங்கும் பகை . 3 . சீனா சொல்லவே தேவை இல்லை அனைவரின் தலைவன் அவன்தான் . ஆசியாவின் அதிகாரம் யாருக்கு சீனா உக்க இல்லை இந்தியாக்கா என்பதை எந்த நேரத்திலும் நீறுபிக்க அனனைத்து வகை ஆயுதத்துடன் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான் . 4 . இலங்கை நமக்கு துணையாய் இருப்பான் என்று எண்ணி என் தமிழ் மக்களை கொன்று குவிக்க உறுதுணையாய் இருந்த்தாயாய். அமெரிக்க அதிக்ககம் பெரிதாகும் பொது அவன் சீனாவின் துணை கொண்டு உன்னை அடிப்பதில் சந்தேகமே இல்லை. ஏற்க்கனவே சீன கப்பல் படை இலங்கையில், சிலதினங்களுக்கு முன்னாள் கச்சத் தீவில் இரண்டு இலங்கை போர் கப்பல்கள் நிற்கும் அதை கடற்ப்படை தளமாகுவோம் என்று அறிவிதாகி விட்டது. நாலு புறமும் நன்பகை வளர்த்து நடுவினில் மக்களை வாழவைத்து கொன்று குவிக்க அணு உலை வைத்தாயே மதி கேட்ட மடையான் கூட செய்யாத செயலை மண்டைக்குள் களிமண் உருண்டை கொண்ட மன்மோகன் அரசு செய்ததுவே .. மக்களே பெராடினால் பொதுவில் நன்மை . பேசாமல் இருந்ததால் புதை குழியில் தனிமை .. மானுடத்தின் காதலன்

Monday, March 19, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஆடு மாடு மேய்த்துக் கொண்டு
ஆரிய கூத்தாடிக் கொண்டு
அடிமை போல வந்த இந்த ஆரியம்

கூடி வாழும் நம்மை கண்டு
கொடுத்துதவும் மனத்தை கண்டு
கொள்ளை கொள்ள வந்த இந்த ஆரியம்

வீரமிக்க மறவர் நம்மை
மாற்றானுக்கு காட்டி கொடுத்தும்
மங்கையரை ...ட்டி கொடுத்தும்
அரியணைக்கு வந்த இந்த ஆரியம்

நன் மக்கள் நம் மக்கள் மாண்டனரே
பகையுணர்வு பூண்டனரே பிளவு
சாதியத்தின் விதை தன்னை
சாமிஎன்று புகுத்திடவே வந்த இந்த ஆரியம்

எண்ணாயீரம் நூல்கள் கண்ட நாம்
ஈரெட்டு தலைமுறையாய் படிக்கலியே
பகுத்தறிவை புதைத்திட்டு பார்ப்பணனை
பார் ஆள வைத்திடவே வந்த இந்த ஆரியம்

வெள்ளையனை வெளியேற்ற வீறு கொண்ட கூட்டத்தை
வேரோடு அகற்றிவிட்டு ஆரியத்தின் தலையினிலே
அரியணையை ஏற்றிடவே வந்த இந்த ஆரியம்

அறுபது ஆண்டுகளாய் அங்கும் இங்கும்
கிளர்ந்தேளுந்தோம் அனாலும் அறியாமல்
அம்மாவின் ஆட்சியிலே மாட்டிக்கொண்டோம்
ஆரியத்தால் நம்கையை நாமே பூட்டிக்கொண்டோம்

குல்லா தலையனின் தலைமையிலே
குள்ளநரி கூட்டம் ஒன்னு திரியுது
அது கூடிக்கூடி போசி பல கொலைகள் புரியுது
கூடன்குலத்திலே அணு குண்டோன்னு வைச்சு
அள்ள அள்ள பணம் கண்ட
அன்னியர்க்கும் இந்திய அமைச்சருக்கும்
அழிவின் வழியாம் ஆறாத வடுவாம்
அணுஉலையை திறக்க ஆயுதம் ஏந்தி நிற்கிறது
அடிமைகள் நாம் என்று .....

" காஷ்மீரில் கண்ட இடத்தில் கொலை
ஒரிசாவில் ஓயாமல் கொலை
பழங்குடிமக்கள் தினம் கொலை
பரமக்குடில் படுகொலை
கூடங்குளத்தில் அணு உலை "

கொலைகார கூட்டத்தின் வேரறுப்போம்
மக்கள் புரட்சி தனை வென்றெடுப்போம் ..

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒதுங்கி நின்றால் அணுஉலையால் சாவு ..


மானுடத்தின் காதலன் .

Saturday, November 12, 2011

நானும் வருவேன் கனவில்
காதல் கொண்டு அல்ல
கவிதை கொண்டு
நண்பன் கனவை கண்டு

அது

அறியாத முகம் அது .
புரியாத உணர்ச்சி அது
தெரியாத உருவம் அது
தெளியாத குழப்பம் அது
மறையாத நினைவு அது
ஓயாத நிலை அது .....
அது ......................

யார் நீ ?

பேரழகின் பேரழகே அந்த மங்கை முகம் தானோ ?
என்னவென்று சொல்வதம்மா அவளின் பேரழகை
அழகான நெற்றி
வில் போன்ற புருவம்
அம்பு எறியும் விழிகள்
பளிங்கி போல் மூக்கு
மொத்தத்தில் அவள் முகத்தில்
அதிகமாய் இருப்பது
"அழகு" மட்டும் தான்..
ஒரு முறை தான் பார்த்தேன் ..
ஒவ்வொரு நொடியும் உன்முகத்தை தான் நினைக்கிறேன்..

அழகின் அழகே அவள் முகம் தான்

வைர மூக்குத்தி போடாமலே உன் மூக்கில் பட்ட சூரிய ஒளி மின்னியதே அது எதனாலோ ?

மறக்க முடியாத விழிகள் ..
மறுக்க முடியாத பார்வை ...
அவளுடையது தான் .....

Google ளிடம் சென்று கேட்டேன் அவள் யார் என்று அவளின் பேரழகில் மயங்கி இதுவரை பதில் சொல்லவில்லை ...

மறுமுறை பார்க்க
ஒருமுறை பேச
வாய்ப்பு கிடைத்தால்
சத்தியமாய் உலரதான் செய்வேன்
அவள் முன்னாள் ...

அதை மறந்துவிட்டேன்
இதை மறந்துவிட்டேன்
என்று ஆயிரம் புகார்கள்..
நான் தான் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறேனே....

ஏன் என் இடத்தில் உங்கள் பெயர்பலகை உள்ளது ..
உங்கள் இடம் அது ...
அவளின் நினைப்பால் ஏற்பட்ட நில அபகரிப்பு ..
நல்லவேளை நான் ..........அல்ல

ஒரு மணிநேர மவுனம் .அவள் முகத்தை மட்டுமே பார்த்த வண்ணம் ..முதல் முறையாய் நண்பா

இன்றும் என்றும் உனக்காக ....

யார் நீ ?
என்று வருவாய் .....
வருவாயா ....
வாழ்க்கை முழுக்க ..

கதிரவனை காணவில்லை

இன்று காலை கதிரவனை காணவில்லை
என்று
நிலாவை அழைக்க நட்சத்திரத்திடம் நம்பர் கேட்டேன் ...

" லூசாய நீ "

பொறுமையாய் இருப்பவனெல்லாம் கோழையுமல்ல ..
கோவமாய் சண்டையிடுபவன் வீரனுமல்ல ...
உண்மையில் ...
கோவத்தை வெல்ல முடியாத கோழை அவன் ..
பொறுமையை தீண்ட முடியாத கோழையும் அவனே ..
இதை சொன்னால் என்னை கேட்கிறான்
" லூசாய நீ "
பாரதிக்கு கவிதை வந்தால் சிறப்பு ...
ஆனால்பாரதியே கவிதையாய் வந்தால் (ள்) ......

மௌனம்....

இதோ கவிதை ..
வார்த்தைகள் இல்லாமல் ..
வர்ணனை இல்லாமல் ..
வாழ்க்கையில்
பலரால்வாசிக்கப்படும்
கவிதைமௌனம் ...

கவிதை

வரி வரியாய் கவிதை சொல்வேன் .
முதல் வரி
இரண்டாம் வரி
மூன்றாம் வரி என
வரி வரியாய் கவிதை சொல்வேன் .

காதல்

நண்பர்களால் காதல் கருவாக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது ..அனால் காதலோ நண்பர்களின் கருவறுத்து நட்பை கல்லறைக்கு அனுப்புகிறது....

உப்புநீராய் குருதி

உழைப்பவனின் குருதி உப்புநீராய் வழிந்தோடி .வார்த்தெடுத்த வெள்ளிப்பணம் அவன் ..வயேற்றுக்கும், வட்டிக்கும், வாரிசுக்கும் ஏன் வாழ்க்கைக்கும் கூட வகை செய்யாமல் வறுமைக்கு வாக்கப்பட வைத்தது அவன் அருமை மகளை.வெட்டியான் வெட்டிவைத்த குழிக்கு கட்டிட காசில்லாமல் கதறி அழுதது அந்த பெண்ணின் மனம்.

Wednesday, July 13, 2011

அறுசுவை உணவு ---?

காலைஇல காப்பி தொட்டு கண்முழித்து
ஐந்தர மணிக்கு எழுந்து அம்மா செய்த
அறுசுவை உணவை அரக்க பறக்க அள்ளி போட்டு
மதிய உணவுக்காக மட்டுமே பேக் எடுத்திட்டு
அவசரமா கல்லுரி வந்தா அப்பவும் கால் மணிநேரம் லேட்
மத்தியானம் பொரியலோட சாம்பார் சாதம்
உண்டு உறங்கி விழுந்து நாலரமனிக்கு
பெட்டிக்கடை வெளியே வெட்டி அரட்டை முடிந்து
அருமையான தோசை அஞ்சு தின்னு
அழகாக வாழ்ந்த காலமது .
படிப்பு முடிஞ்சு வேலைக்கு வெளயுருக்கு பொய்
வேள வேளைக்கு வெளியில் சோறு .
எத்தனைமணிக்கு படுத்தலும் எட்டரமனிக்கு மேல
எழுந்து பொங்கல் பூரின்னு போற வழில
சாப்பிட்டு சில நாள் அதுவும் இன்றி
அப்பிசுக்கு வெளிய மதியம் வகை வகைய
சாப்பாட்டு வறுத்த மீனு பொரிச்ச கோழி
எல்லாம் தின்னு நல்ல வஈர வாயுக்கு கடன் கொடுத்திட்டு
அவன் எத தின்னாலும் உதைக்கிறான்
வயித்து குள்ள இது வாலிப வயசு இப்ப ஏறயுதுட வயேறு
வலி தாங்காம ஐயோ அம்மான்னு அலறுன உள்ளே இருந்து
ஒரு குரல் அல்சர் னா சும்மாவா - அவர்தான் டாக்டர் ..

Sunday, July 10, 2011

உங்கள் தனிமையை பகிர்ந்து கொள்ள
உங்களுக்கே உரிமை இல்லாத பொது
நான் மட்டும் எப்படி வருவேன்
நண்பனாக ...