Friday, May 4, 2012

வான் மகள்

அழகான மாலை நேரம் அருமையான தென்றல் காற்று அனாதையாய் அமர்ந்திருந்தேன் அன்னைபோல் அரவணைக்க வந்தாள் இருவரும் பார்த்தோம் இன்பமான நேரம் ஒரு முத்தம் கேட்டேன் மறுத்தாள் உறங்க மடி கேட்டேன் மறுத்தாள் சிறு புன்னகை கேட்டேன் மறுத்தாள் இருவரும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம் திட்டவாவது செய் என்றேன் மறுத்தாள் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தோம் காலை விடிந்ததும் கதிரவன் வந்ததும் தாவிக் குதித்து ஓடி மறைந்தாள் என்னை மட்டும் தனிமைபடுத்திவிட்டு ... மானுடத்தின் காதலன்

No comments:

Post a Comment