Saturday, November 12, 2011

நானும் வருவேன் கனவில்
காதல் கொண்டு அல்ல
கவிதை கொண்டு
நண்பன் கனவை கண்டு

அது

அறியாத முகம் அது .
புரியாத உணர்ச்சி அது
தெரியாத உருவம் அது
தெளியாத குழப்பம் அது
மறையாத நினைவு அது
ஓயாத நிலை அது .....
அது ......................

யார் நீ ?

பேரழகின் பேரழகே அந்த மங்கை முகம் தானோ ?
என்னவென்று சொல்வதம்மா அவளின் பேரழகை
அழகான நெற்றி
வில் போன்ற புருவம்
அம்பு எறியும் விழிகள்
பளிங்கி போல் மூக்கு
மொத்தத்தில் அவள் முகத்தில்
அதிகமாய் இருப்பது
"அழகு" மட்டும் தான்..
ஒரு முறை தான் பார்த்தேன் ..
ஒவ்வொரு நொடியும் உன்முகத்தை தான் நினைக்கிறேன்..

அழகின் அழகே அவள் முகம் தான்

வைர மூக்குத்தி போடாமலே உன் மூக்கில் பட்ட சூரிய ஒளி மின்னியதே அது எதனாலோ ?

மறக்க முடியாத விழிகள் ..
மறுக்க முடியாத பார்வை ...
அவளுடையது தான் .....

Google ளிடம் சென்று கேட்டேன் அவள் யார் என்று அவளின் பேரழகில் மயங்கி இதுவரை பதில் சொல்லவில்லை ...

மறுமுறை பார்க்க
ஒருமுறை பேச
வாய்ப்பு கிடைத்தால்
சத்தியமாய் உலரதான் செய்வேன்
அவள் முன்னாள் ...

அதை மறந்துவிட்டேன்
இதை மறந்துவிட்டேன்
என்று ஆயிரம் புகார்கள்..
நான் தான் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறேனே....

ஏன் என் இடத்தில் உங்கள் பெயர்பலகை உள்ளது ..
உங்கள் இடம் அது ...
அவளின் நினைப்பால் ஏற்பட்ட நில அபகரிப்பு ..
நல்லவேளை நான் ..........அல்ல

ஒரு மணிநேர மவுனம் .அவள் முகத்தை மட்டுமே பார்த்த வண்ணம் ..முதல் முறையாய் நண்பா

இன்றும் என்றும் உனக்காக ....

யார் நீ ?
என்று வருவாய் .....
வருவாயா ....
வாழ்க்கை முழுக்க ..

கதிரவனை காணவில்லை

இன்று காலை கதிரவனை காணவில்லை
என்று
நிலாவை அழைக்க நட்சத்திரத்திடம் நம்பர் கேட்டேன் ...

" லூசாய நீ "

பொறுமையாய் இருப்பவனெல்லாம் கோழையுமல்ல ..
கோவமாய் சண்டையிடுபவன் வீரனுமல்ல ...
உண்மையில் ...
கோவத்தை வெல்ல முடியாத கோழை அவன் ..
பொறுமையை தீண்ட முடியாத கோழையும் அவனே ..
இதை சொன்னால் என்னை கேட்கிறான்
" லூசாய நீ "
பாரதிக்கு கவிதை வந்தால் சிறப்பு ...
ஆனால்பாரதியே கவிதையாய் வந்தால் (ள்) ......

மௌனம்....

இதோ கவிதை ..
வார்த்தைகள் இல்லாமல் ..
வர்ணனை இல்லாமல் ..
வாழ்க்கையில்
பலரால்வாசிக்கப்படும்
கவிதைமௌனம் ...

கவிதை

வரி வரியாய் கவிதை சொல்வேன் .
முதல் வரி
இரண்டாம் வரி
மூன்றாம் வரி என
வரி வரியாய் கவிதை சொல்வேன் .

காதல்

நண்பர்களால் காதல் கருவாக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது ..அனால் காதலோ நண்பர்களின் கருவறுத்து நட்பை கல்லறைக்கு அனுப்புகிறது....

உப்புநீராய் குருதி

உழைப்பவனின் குருதி உப்புநீராய் வழிந்தோடி .வார்த்தெடுத்த வெள்ளிப்பணம் அவன் ..வயேற்றுக்கும், வட்டிக்கும், வாரிசுக்கும் ஏன் வாழ்க்கைக்கும் கூட வகை செய்யாமல் வறுமைக்கு வாக்கப்பட வைத்தது அவன் அருமை மகளை.வெட்டியான் வெட்டிவைத்த குழிக்கு கட்டிட காசில்லாமல் கதறி அழுதது அந்த பெண்ணின் மனம்.

Wednesday, July 13, 2011

அறுசுவை உணவு ---?

காலைஇல காப்பி தொட்டு கண்முழித்து
ஐந்தர மணிக்கு எழுந்து அம்மா செய்த
அறுசுவை உணவை அரக்க பறக்க அள்ளி போட்டு
மதிய உணவுக்காக மட்டுமே பேக் எடுத்திட்டு
அவசரமா கல்லுரி வந்தா அப்பவும் கால் மணிநேரம் லேட்
மத்தியானம் பொரியலோட சாம்பார் சாதம்
உண்டு உறங்கி விழுந்து நாலரமனிக்கு
பெட்டிக்கடை வெளியே வெட்டி அரட்டை முடிந்து
அருமையான தோசை அஞ்சு தின்னு
அழகாக வாழ்ந்த காலமது .
படிப்பு முடிஞ்சு வேலைக்கு வெளயுருக்கு பொய்
வேள வேளைக்கு வெளியில் சோறு .
எத்தனைமணிக்கு படுத்தலும் எட்டரமனிக்கு மேல
எழுந்து பொங்கல் பூரின்னு போற வழில
சாப்பிட்டு சில நாள் அதுவும் இன்றி
அப்பிசுக்கு வெளிய மதியம் வகை வகைய
சாப்பாட்டு வறுத்த மீனு பொரிச்ச கோழி
எல்லாம் தின்னு நல்ல வஈர வாயுக்கு கடன் கொடுத்திட்டு
அவன் எத தின்னாலும் உதைக்கிறான்
வயித்து குள்ள இது வாலிப வயசு இப்ப ஏறயுதுட வயேறு
வலி தாங்காம ஐயோ அம்மான்னு அலறுன உள்ளே இருந்து
ஒரு குரல் அல்சர் னா சும்மாவா - அவர்தான் டாக்டர் ..

Sunday, July 10, 2011

உங்கள் தனிமையை பகிர்ந்து கொள்ள
உங்களுக்கே உரிமை இல்லாத பொது
நான் மட்டும் எப்படி வருவேன்
நண்பனாக ...
பொங்கி வரும் கடலலை கண்டேன் .
பொங்கத தமிழ் மனம் கண்டு ...
விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை ..
விட்டு கொடுத்தவர்கள் வெற்றி பெறுவது எப்போது ?

Wednesday, April 13, 2011

காரணம் .....

தளிர் இடையே குழந்தையாய் குந்தி இருந்த்தேன்
என் மேனி தொட்டு மொட்டுடைத்து குமரி ஆக்கினாய்
என் வாசம் பரப்பினாய் ..
என் வாசம் கண்டு காளையர்கள்
என் வசம் வந்து வட்டமிட்டனர்
என் தேன் குடித்து பறந்தோ டினர்
இதோ இன்னொருவன்
போதும் போதும் இந்த பிழைப்பு
தென்றலே நீ புயலாய் மாறு
என்னை புழுதியோடு சேர்த்துவிடு
கருணை செய்வாய் காற்றே..

மானுடத்தின் காதலன் ....

Tuesday, January 18, 2011

" வெற்றி "

தாய் கொடுத்தது " உயிர் " எழுத்து
தந்தை கொடுத்தது " முதல் " எழுத்து
ஆசிரியர் கொடுத்தது " வடிவ " எழுத்து
கடவுள் கொடுத்தது " தலை " எழுத்து
தமிழ் கொடுத்தது " ஆயுத " எழுத்து
நாமே கொடுத்தது " கை " எழுத்து
படிப்பு கொடுத்தது " பட்ட " எழுத்து
பதவி கொடுத்தது " பொறுப்பு " எழுத்து
ஆஅ என்பது " முதல் " எழுத்து
ழ என்பது "சிறப்பு " எழுத்து
என்றும் நம் வெற்றி காண்பது " மெய் "எழுத்து

விபத்து

வினாடி இன் விலை ....
விதி இன் விளைவு
விழிப்பின் அவசியம்
வேகத்தின் வெற்றி
விவேகத்தின் தோல்வி
விரும்பாத விளையாட்டு
வருத்தத்தின் வாசல்
வழக்கமான வழிப்போக்கன் ..........

Wednesday, January 12, 2011

பொங்கலோ ...... பொங்கல் ......

காலையில கதிரவன் கை நீட்டி எழுப்பி விட
கருக்கிய ரோட்டி துண்டு வெண்ணை சேர்த்து தின்று விட்டு
கால தாமதமாக அலுவலகம் பொய் விட்டு
பறந்தோடி வந்து நிலவத்தேடி சூரியன் வரும் வேலைஇல வீடு வந்த
பொங்கலோ பொங்கல் .... பொங்கலோ பொங்கல் ன்று பெருங்கூச்சல்
படுத்தத்தெழுந்து பத்தர மணிக்கு இரண்டு இடலி கொஞ்சம் பொங்கல்
சிறுத்த வயறு கொள்ளள , மத்தவங்க சிறப்பு நிகழ்ச்சி இல சிதைந்து போக
நான் மட்டும் மடிகணினி இல நண்பர்களுடன் அரட்டை ,
மச்சான் ன்னு சத்தம் கேட்க பள்ளி தோழன் மாரிமுத்து
நல்ல நலம் தான் ஆனா இருந்த மூணு பாகம் நெலத்தையும் வித்து தம்பிய படிக்க வச்சிட்டன் இப்போ பஞ்சாலைக்கு போறான்
என்ன மாதிரி என் தம்பியும் பன்னண்டவதுல நம்ம ஊருல முதலிடம் , அதே மாதிரி இப்ப உம் முதலிடம் தான் பெங்களூர் வேலையாம் பரிச்ச முடிச்சதும்
வரச்சொல்லிருக்காங்க ஒன்குட தங்க வைக்கிறதுக்கு கேக்க சொன்னான்
அதான் பொங்கலுக்கு வரும்போது ஒரு வர்த்த சொல்லி வைக்கலாம்னு வந்தேன் விளையாட்டு போட்டி பாக்க வா .. வீட்டு திண்ணை இல பாஏய் போட்டு
வைச்சிருக்கேன் தம்பிக்கு ஒங்க அப்பதான் பரிசு கொடுக்க போறார் ஆறு வருசமா
அவன்தான் நம்ம ஊருல முதலிடம் வர்றான்
அக்கா புள்ளைகள குப்பிட்டு கொண்டு வா சாயங்காலம் கலை நிகழ்ச்சி உண்டு .....

Saturday, January 8, 2011

தாய்மை

எங்கு பிறப்போம்
எங்கு இருப்போம்
எங்கு இறப்போம்
என்று தெரியாது
என்னே விந்தை
இந்த விந்தைஇல்
உண்மை ஒன்றே
அது
" தாய்மை "