Wednesday, April 13, 2011

காரணம் .....

தளிர் இடையே குழந்தையாய் குந்தி இருந்த்தேன்
என் மேனி தொட்டு மொட்டுடைத்து குமரி ஆக்கினாய்
என் வாசம் பரப்பினாய் ..
என் வாசம் கண்டு காளையர்கள்
என் வசம் வந்து வட்டமிட்டனர்
என் தேன் குடித்து பறந்தோ டினர்
இதோ இன்னொருவன்
போதும் போதும் இந்த பிழைப்பு
தென்றலே நீ புயலாய் மாறு
என்னை புழுதியோடு சேர்த்துவிடு
கருணை செய்வாய் காற்றே..

மானுடத்தின் காதலன் ....