Saturday, November 12, 2011

யார் நீ ?

பேரழகின் பேரழகே அந்த மங்கை முகம் தானோ ?
என்னவென்று சொல்வதம்மா அவளின் பேரழகை
அழகான நெற்றி
வில் போன்ற புருவம்
அம்பு எறியும் விழிகள்
பளிங்கி போல் மூக்கு
மொத்தத்தில் அவள் முகத்தில்
அதிகமாய் இருப்பது
"அழகு" மட்டும் தான்..
ஒரு முறை தான் பார்த்தேன் ..
ஒவ்வொரு நொடியும் உன்முகத்தை தான் நினைக்கிறேன்..

அழகின் அழகே அவள் முகம் தான்

வைர மூக்குத்தி போடாமலே உன் மூக்கில் பட்ட சூரிய ஒளி மின்னியதே அது எதனாலோ ?

மறக்க முடியாத விழிகள் ..
மறுக்க முடியாத பார்வை ...
அவளுடையது தான் .....

Google ளிடம் சென்று கேட்டேன் அவள் யார் என்று அவளின் பேரழகில் மயங்கி இதுவரை பதில் சொல்லவில்லை ...

மறுமுறை பார்க்க
ஒருமுறை பேச
வாய்ப்பு கிடைத்தால்
சத்தியமாய் உலரதான் செய்வேன்
அவள் முன்னாள் ...

அதை மறந்துவிட்டேன்
இதை மறந்துவிட்டேன்
என்று ஆயிரம் புகார்கள்..
நான் தான் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறேனே....

ஏன் என் இடத்தில் உங்கள் பெயர்பலகை உள்ளது ..
உங்கள் இடம் அது ...
அவளின் நினைப்பால் ஏற்பட்ட நில அபகரிப்பு ..
நல்லவேளை நான் ..........அல்ல

ஒரு மணிநேர மவுனம் .அவள் முகத்தை மட்டுமே பார்த்த வண்ணம் ..முதல் முறையாய் நண்பா

இன்றும் என்றும் உனக்காக ....

யார் நீ ?
என்று வருவாய் .....
வருவாயா ....
வாழ்க்கை முழுக்க ..

No comments:

Post a Comment